ADVERTISEMENT
இந்தியாவில் கரோனா இரண்டாம் அலையின் பரவல் அதிகமாக உள்ளது. இந்நிலையில் பல மாநிலங்களிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து தமிழகத்திலும் கரோனாவின் பாதிப்பு மற்றும் இறப்பு எண்ணிக்கையானது அதிகரித்துள்ள நிலையில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
ADVERTISEMENT
அதன்படி இன்று (06.05.2021) முதல் அத்தியாவசிய கடைகள் தவிர அனைத்துக் கடைகளையும் முட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இன்று முதல் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளதால் சென்னை தி. நகர் ரங்கநாதன் தெரு, கோயம்பேடு மார்க்கெட், மயிலாப்பூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் அனைத்தும் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.
Show comments