ADVERTISEMENT

அரசு பணியில் இருந்து சகாயம் ஐ.ஏ.எஸ். விருப்ப ஓய்வு!

09:38 AM Oct 31, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழக அரசு பணியில் இருந்து ஓய்வு பெற சகாயம் ஐ.ஏ.எஸ். விண்ணப்பித்துள்ளார்.

அரசு பதவியிலிருந்து ஓய்வு பெற மூன்று ஆண்டுகள் உள்ள நிலையில் 57 வயதிலேயே சகாயம் வி.ஆர்.எஸ். கேட்டு விண்ணப்பித்துள்ளார். வி.ஆர்.எஸ்.க்கு விண்ணப்பித்த சகாயம் இன்னும் இரண்டு மாதங்களில் அரசு பதவியிலிருந்து விடுவிக்கப்படுவார்.

தமிழ்நாடு அறிவியல் நகர துணைத் தலைவராக ஆறு வருடங்களாக பதவி வகித்து வரும் சகாயம் ஐ.ஏ.எஸ்., முக்கியமில்லாத பதவியில் பல ஆண்டுகளாக தமிழக அரசு வைத்திருப்பதால், அவர் விருப்ப ஓய்வு முடிவை எடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

'மக்கள் பாதை' என்ற அமைப்புடன் இணைந்து சமூக சேவையாற்றி வரும் சகாயம் ஐ.ஏ.எஸ்., மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்தபோது கிரானைட் ஊழலை வெளியே கொண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT