ADVERTISEMENT
ADVERTISEMENT
மறைந்த பாடகர் எஸ்.பி.பிக்கு தற்போது வரை அவரது ரசிகர்களும், மக்களும், பிரபலங்களும் சமூக வலைதளங்கள் வாயிலாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், அவருக்கு 'பாரத ரத்னா' விருது வழங்குவதற்கு நிச்சயமாக நான் முயற்சி செய்வேன் என இசையமைப்பாளரும், இயக்குனருமான கங்கை அமரன் தெரிவித்துள்ளார். தஞ்சையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பாரத ரத்னா விருது குழுவில் நானும் ஒரு உறுப்பினராக இருப்பதால் மறைந்த பாடகர் எஸ்.பி.பிக்கு புகழ் சேர்க்கும் விதமாக அவருக்கு 'பாரத ரத்னா' விருது வழங்கப்படுவதற்கான முயற்சிகளை எடுப்பேன் எனத் தெரிவித்துள்ளார்.
Show comments