ADVERTISEMENT
ADVERTISEMENT
அரசியலுக்கு கண்டிப்பாக வரப் போவதில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த், தான் அரசியலுக்கு வர மாட்டேன் என்று கடந்த சில வாரங்களுக்கு முன்பு அறிக்கை வெளியிட்ட நிலையிலும் அவரது ரசிகர்கள் சிலர், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அவர் மீண்டும் அரசியலுக்கு வர வேண்டி போராட்டம் நடத்தினார்கள். ரஜினி தன்னுடைய முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி சிலர் பேசினார்கள். இந்நிலையில் இதுதொடர்பாக ரஜினிகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தான் எடுத்த முடிவில் இருந்து மாறப்போவதில்லை என்றும், தன்னை கட்டாயப்படுத்தி வேதனைக்குள்ளாக்க வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார். ரஜினி ரசிகர்கள் இதனை ஏற்றுக்கொள்வார்களா அல்லது மீண்டும் வற்புறுத்துவார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Show comments