ADVERTISEMENT

                                                  நானும் சொல்கின்றேன்! பா.ஜ.க வின் பாசிச ஆட்சி ஒழிக! - ஸ்டாலின்

01:01 PM Sep 04, 2018 | Anonymous (not verified)

ADVERTISEMENT

ADVERTISEMENT

தூத்துக்குடி விமான நிலையத்தில் நேற்று (3-09-2018) பா.ஜ.க தலைவர் திருமதி தமிழிசை சவுந்தரராஜன் முன்பு, “பா.ஜ.க வின் பாசிச ஆட்சி ஒழிக!” என்று முழக்கமிட்டதால் மாணவி சோபியாவை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்ததற்கு , தி.மு.கழகத் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவின் விவரம் பின்வருமாறு:

’’ஜனநாயக விரோத - கருத்துரிமைக்கு எதிரான தமிழக அரசின் இந்த நடவடிக்கை கடும் கண்டனத்துக்குரியது! உடனடியாக அவரை விடுதலை செய்ய வேண்டும்!

அப்படி சொல்பவர்களை எல்லாம் கைது செய்வீர்கள் என்றால் எத்தனை இலட்சம் பேரை சிறையில் அடைப்பீர்கள்?

நானும் சொல்கின்றேன்! “பா.ஜ.க வின் பாசிச ஆட்சி ஒழிக!”


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT