இதனைத் தொடர்ந்து ஏரியை சுற்றி போலீசார் தேடியபோது ஏரியின் பின்புற கரையை ஒட்டி பள்ளம் தோண்டப்பட்ட தடயம் இருப்பதை போலீஸார் கண்டனர். உடனடியாக வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு, அவர்கள் முன்னிலையில் போலீஸார் அந்த இடத்தில் பள்ளம் தோண்டினர். அப்போது பாலசுப்பிரமணி ரத்த வெள்ளத்தில் கைகள் உடைக்கப்பட்டு தலை, வயிறு உள்ளிட்ட பகுதிகளில் வெட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
அப்போது ஹரிணி, யாரிடமும் பேசுவதற்கு கூட எனக்கு செல்போன் இல்லை. என் மீது சந்தேகப்பட வேண்டாம் எனத் தெரிவித்துள்ளார். ஒரு கட்டத்தில் போலீசாரின் கிடுக்குப்பிடி விசாரணையில் ஹரிணியிடம் செல்போன் இருப்பது உறுதியானது. இதைத் தொடர்ந்து ஹரிணியின் செல்போன் அழைப்புகளைக் கொண்டு விசாரணையில் இறங்கிய போலீசார், அதே பகுதியைச் சேர்ந்த ஹரிணியின் ஆண் நண்பரான முத்து ஜெயம் (45) என்பவரை கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில், நானும் ஹரிணியும் தனிமையில் இருப்பதற்கு அவரது கணவர் பாலசுப்பிரமணியம் தடையாக இருந்தார். அதனால், கூலிப்படை வைத்து இரவோடு இரவாக அவரை கொலை செய்து ஏரி கரையில் புதைத்துவிட்டோம் என தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்டு தலைமறைவாகியுள்ள கூலிப்படை தலைவனான பாதிரிவேட்டையைச் சேர்ந்த கெத்து பிரபு என்கிற பிரபு (30), சூர்யா (26) மாநல்லூரைச் சேர்ந்த அஜய் (23) பாலாஜி (23) ஆகியோரை தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.