தமிழகத்தில் மருந்தாளுனர் பணியிடங்களுக்கான தேர்வில் பி.பார்ம் பட்டதாரிகளையும் அனுமதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
தமிழகத்தில் மருந்தாளுனர் பணிக்கான தேர்வு குறித்து மருத்துவ பணிகள் இயக்குனர் மார்ச் 1 ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டிருந்த நிலையில், டிப்ளமோ படித்தவர்களுக்கான மருந்தாளுனர் பணிக்கான தேர்வில் பி.பார்ம் பட்டதாரிகளையும் அனுமதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.
இந்த வழக்கில் பி.பார்ம் பட்டதாரிகளும் மருந்தாளுனர் பணிக்கு விண்ணப்பிக்கும் வகையில் ஆன்லைனில் வசதியை ஏற்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Show comments