Skip to main content

சட்டக்கல்லூரி மாணவர்கள் நேரில் தேர்வு எழுதும் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்! -அம்பேத்கர் பல்கலைக்கழகத்துக்கு கோரிக்கை!

Published on 11/09/2020 | Edited on 11/09/2020

 

Law students must cancel the exam writing order in person! - Request to Ambedkar University!

 

 

சட்டக்கல்லூரி மாணவர்கள், டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு அனுப்பிய மனுவில் - ‘தமிழகம் முழுவதும் உள்ள சட்டக்கல்லூரிகளில் இறுதியாண்டு மாணவர்களுக்கு தேர்வு நடத்தத் திட்டமிட்டுள்ளார்கள்.  கல்லூரிகளில் படிக்கும் மூன்றாம் ஆண்டு மற்றும்  ஐந்தாம் ஆண்டு மாணவிகளுக்கு  தேர்வு நடத்துவதற்கான அட்டவணையை, டாக்டர் அம்பேத்கர் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. அட்டவணை கடந்த 3-ஆம் தேதி வெளியியிடப்பட்டது.

 

இந்த அட்டவணையின் படி,  வருகிற 23, 24 ,25 மற்றும் 29-ம் தேதிகளில் இறுதித்தேர்வு நடத்தப்படும்.  இந்த தேர்வை மாணவ-மாணவிகள், அந்தந்த கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்ட தேர்வு மையத்துக்கு,  நேரில் வந்துதான் எழுத வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்கள்.  இதற்கான விண்ணப்பங்களை வருகிற 10-ம் தேதி,  மாணவர்கள் கல்லூரியில் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.  மாணவர்கள் நேரில் வந்து தேர்வு எழுத வேண்டும் என்ற உத்தரவினால் மாணவர்களுக்கு பெரிதும் பாதிப்பு ஏற்படும். தற்போதுள்ள கொரோனா காலத்தில்,  மாணவர்கள் கல்லூரிக்கு வந்து தேர்வு எழுதினால் பெரிதும் பாதிப்பு ஏற்படும்.

 

மாணவர்கள்  தேர்வை முடித்துவிட்டு வீட்டுக்குச் செல்வார்கள். வீட்டில் உள்ள பெற்றோர்கள், உறவினர்கள் ஆகியோர் பெரும் அச்சத்தில் உள்ளார்கள்.  கல்லூரிக்கு சென்றுவிட்டு திரும்பும்போது கரோனா பிடியில் சிக்கி விடுவானோ மகன் என்று பெற்றோர்கள் அச்சப்படுகிறார்கள். ஆன்லைன் மூலமாகத்தான் தேர்வு நடத்த வேண்டும் எனத் தமிழக அரசு, அந்தந்த பல்கலைக்கழகங்களை அறிவுறுத்தியுள்ளது.  ஆனால்,  டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைகழகம்,   ஆன்லைனில் தேர்வு நடத்தாமல் நேரில் வந்து தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது,  மாணவர்களுக்கு அச்சத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தி உள்ளது.  

 

இது தவிர,  தேர்வுகள் தொடர்ந்து நடத்துகிறார்கள். இது மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.  இதற்காக,   தேர்வு  மையங்களைத்  தேர்வு செய்துள்ளார்கள்.  மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வு நடத்துவதுதான் தற்போதைய சூழ்நிலையில் சரியாக இருக்கும் என்று மாணவர்கள் கருதுகிறார்கள்.  எனவே,  நேரில் வந்து தேர்வு எழுதவேண்டும் என்ற உத்தரவை டாக்டர் அம்பேத்கர் பல்கலைக்கழகம் ரத்து செய்து, ஆன்லைன் மூலமாக தேர்வு நடத்த வேண்டும்.’ என  துணைவேந்தருக்கு,  மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'கடைசி நேரத்தில் இடமாற்றம் செய்ய உத்தரவிட முடியாது'- நீதிமன்றம் பதில்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
'Can't order transfer at the last moment'- court reply

தமிழக கூடுதல் டிஜிபி அருண் ஒரு கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் எனவே அவரை  இடமாற்றம் செய்ய வேண்டும் எனக்கோரி வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஐபிஎஸ் அதிகாரி அருணை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது. அதிகாரிகள் நடவடிக்கைகளைத் தேர்தல் ஆணையம் கண்காணித்து தவறு செய்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.  

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் எஸ்.கே.சாமி என்பவர், உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். தேர்தல் ஆணையம் சார்பில் காவல்துறை கூடுதல் டிஜிபி ஆக இருக்கக்கூடிய காவல்துறை அதிகாரி அருண் ஒரு கட்சிக்காக செயல்படுகிறார். அவரை இடமாற்றம் செய்ய வேண்டும் என மனுதாரர் தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்பில் அந்த அதிகாரி இருப்பதாகவும் ஆகவே எந்த அச்சமும் மனுதாரர் கொள்ள வேண்டாம். அதே நேரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரி யாராக இருந்தாலும் தேர்தல் நடவடிக்கையை பொறுத்தவரை சரியான முறையில் இயங்கவில்லை என்றால் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தலை நியாயமாக நேர்மையாக நடத்த வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை. கடைசி நேரத்தில் காவல்துறை அதிகாரியை இடமாற்றம் செய்ய உத்தரவிட முடியாது'  எனக் கூறி இந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வந்தனர். 

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.