ADVERTISEMENT

குழந்தைகளின் ஆபாச படங்கள்- உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கண்டிப்பு!

05:56 PM Jun 18, 2021 | santhoshb@nakk…

ADVERTISEMENT

குழந்தைகளின் ஆபாச படங்களைப் பகிர்ந்ததாக போக்சோ வழக்கில் இளைஞருக்கு முன் ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

ADVERTISEMENT

குழந்தைகளின் ஆபாச படங்களைப் பகிர்ந்ததாக போக்சோ வழக்கில் இளைஞர் சாம் இன்பென்ட் ஜோன்ஸ் முன் ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு இன்று (18/06/2021) நீதிபதி சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, குழந்தைகளின் ஆபாச படங்களைப் பகிர்வது என்பது தீவிரமாக அணுக வேண்டிய பிரச்சனை. போக்சோ சட்ட விதி பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவது மத்திய மற்றும் மாநில அரசுகளின் கடமை ஆகும். நல்லொழுக்க கல்வி மட்டுமே இது போன்ற குற்றங்களைத் தடுக்கும் அரணாக இருக்கும். கரோனா காலமாக இருப்பதை மனதில் கொண்டு மனுதாரருக்கு முன் ஜாமீன் வழங்கப்படுகிறது என்று கூறிய குழந்தைகளின் ஆபாச படங்களைப் பகிர்ந்ததாக போக்சோ வழக்கில் கைதான இளைஞர் சாம் இன்பென்ட் ஜோன்ஸ்க்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT