சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சியின் தலைமை அலுவலகத்தில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான பழனிசாமி ஆலோசனை செய்தனர்.
அதிமுக சார்பில் ஜனவரி 25- ஆம் தேதி தமிழகத்தில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள் நடைபெறுகின்றன என்று அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளது. அதன்படி தென்சென்னையில் முதல்வர் பழனிசாமியும், காஞ்சிபுரத்தில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வமும் பொதுக்கூட்டங்களில் கலந்துக் கொண்டு பேசுகின்றனர்.
ADVERTISEMENT
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 72- வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவது பற்றி ஆலோசனை செய்ததாக தகவல் கூறுகின்றனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் அதிமுகவின் அம்மா பேரவை மாநில செயலாளரும், அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அவைத்தலைவர் மதுசூதன் ஆகியோர் பங்கேற்றனர்.
ADVERTISEMENT
அதிமுக சார்பில் ஜனவரி 25- ஆம் தேதி தமிழகத்தில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள் நடைபெறுகின்றன என்று அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளது. அதன்படி தென்சென்னையில் முதல்வர் பழனிசாமியும், காஞ்சிபுரத்தில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வமும் பொதுக்கூட்டங்களில் கலந்துக் கொண்டு பேசுகின்றனர்.
Show comments