ADVERTISEMENT

5 மாவட்டங்களில் நாளை கனமழை!

04:26 PM Apr 22, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழகத்தில் நாளை ஐந்து மாவட்டங்களில் கனமழை பொழியும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதில் " மன்னார்வளைகுடா பகுதியில் ஏற்பட்டுள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகவும் வெப்பச்சலனம் காரணமாகவும் தமிழகம் மற்றும் புதுசேரியில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருக்கும். நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசி ஆகிய 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. தென்தமிழகம், கோவை, திருப்பூர் ஆகிய இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும்" எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT