சிபிஐ விசாரணையின் மூலம் குட்கா ஊழல் - லஞ்ச பேர்வழிகள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ADVERTISEMENT
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாடு முழுவதும் நன்கு அறிந்து வைத்திருக்கும் ‘குட்கா’ விவகாரத்தில், சி.பி.ஐ. விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதை வரவேற்கிறேன். தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் தொடர்ந்த இந்த வழக்கில், லஞ்ச ஒழிப்புத் துறையிடமிருந்த விசாரணையை சுதந்திரமாகவும், நேர்மையாகவும், நியாயமாகவும் விசாரணை நடைபெறவேண்டும் என்ற காரணத்தால், சி.பி.ஐ.க்கு மாற்றி உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
ADVERTISEMENT
இதன்மூலம், ஊழல் - இலஞ்ச பேர்வழிகள் கடுமையாக தண்டிக்கப்பட்டு, சட்டப்படியான நியாயம் நிலைநாட்டப்படும் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது.
Show comments