ADVERTISEMENT

குட்கா முறைகேடு வழக்கு; விஜயபாஸ்கர் உதவியாளர் சரவணன் ஆஜர்!!

10:27 AM Dec 07, 2018 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

குட்கா முறைகேடு வழக்கில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் சரவணன் நேரில் ஆஜராகியுள்ளார்.

குட்கா முறைகேடு வழக்கில் நேரில் ஆஜராகுமாறு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சிபிஐ நேற்று சம்மன் அனுப்பியிருந்தது.

குட்கா விவகாரத்தில் விசாரணை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் டெல்லி சிபிஐ அதிகாரிகள் சென்னையில் முகாமிட்டுள்ளனர். இந்நிலையில் குட்கா முறைகேடு வழக்கில் நேரில் ஆஜராகுமாறு சுகாதாரதுறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நேற்று சிபிஐ சம்மன் அனுப்பியள்ளது. அதேபோல் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகுமாறு விஜயபாஸ்கரின் உதவியாளர் சரவணனனுக்கும் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் சரவணன் இன்று காலை 8 மணிக்கே நுங்கம்பாக்கத்திலுள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜரான நிலையில் 10 மணிக்கு அவரிடம் விசாரணையை ஆரம்பித்துள்ளது சிபிஐ.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT