Skip to main content

அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது... எந்தந்த கட்சிகள் பங்கேற்றன???

Published on 29/11/2018 | Edited on 29/11/2018
anna arivalayam

 

திமுக சார்ப்பில் நடக்கவிருந்த அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது. இதில் மேகதாது அணை பிரச்சனை குறித்து பேசப்படும் என தெரிவிக்கப்பட்டது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடக்கும் இந்த கூட்டத்தில் வைகோ, திருமாவளவன், முத்தரசன், திருநாவுக்கரசர், கே. பாலகிருஷ்ணன், கலி.பூங்குன்றன், சுப.வீரபாண்டியன், அப்துல் சமத் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். தற்போதுவரை திமுக தோழமை கட்சிகள் மட்டுமே பங்கேற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.  திராவிடர் கழகம், காங்கிரஸ், மதிமுக, விசிக, கம்யூனிஸ்ட், மா.கம்யூனிஸ்ட், உள்ளிட்ட கட்சிகளும், இயக்கங்களும் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளன. 

 

 

சார்ந்த செய்திகள்