ADVERTISEMENT

திருச்சியில் அரசு பேருந்து கோரவிபத்து; ஒருவர் உயிரிழப்பு; 5 பேர் படுகாயம்!!

04:50 PM Nov 11, 2018 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

அரசு பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதியதால் நிலைதடுமாறிய பேருந்து, பேருந்து நிறுத்தத்தில் புகுந்து விபத்துக்குள்ளாகி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

திருச்சியில் இருந்து கம்பம் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து திருச்சி ராம்ஜிநகர் மேல்காலனி பகுதியில் வந்து கொண்டிருந்தபோது அப்பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த எட்டரை என்ற கிராமத்தைச் சேர்ந்த மதுக்குமார் என்பவர் பேருந்தின் மீது இருசக்கர வாகனத்தை மோதி விபத்துக்கு உள்ளாகி உள்ளார்.

இதனால் நிலை தடுமாறிய பேருந்து அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் புகுந்து விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் பைக்கில் வந்த இளைஞர் மதுக்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்திருந்த இரு பெண்கள் உட்பட 5 பேர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்த அனைவரும் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. இந்த விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT