ADVERTISEMENT
தொடக்க கல்வி ஆசிரியர் பட்டய பயிற்சிக்கான தேர்வை ஆன்லைன் மூலம் நடத்தவோ அல்லது அனைவரும் தேர்ச்சி பெற்றதாகவோ அறிவிக்கக்கோரி தேர்வெழுதவந்த மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ADVERTISEMENT
கடந்த மாதம் 21 முதல் அடுத்த மாதம் 7 வரை தேர்வு இதனை தமிழகம் முழுவதும் 15,000த்திற்கும் மேற்பட்டோர் எழுதுகின்றனர். இந்நிலயில் இன்று திருவல்லிக்கேணி, வெலிங்கடன் சீமாட்டி அரசு மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்தில் தேர்வெழுதவந்த மாணவிகள் தேர்வைப் புறக்கணித்து, தங்களுக்கும் ஆன்லைன் மூலம் தேர்வு நடத்த வேண்டும் அல்லது அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
Show comments