ADVERTISEMENT
கேரள மாநிலம் ஆலப்புழாவில் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து என்ஜினில் இருந்து திடீரென புகை வெளிப்பட்ட நிலையில், எரியத் தொடங்கியது. இதனால் பதற்றமடைந்த பயணிகள் அனைவரும் இறக்கிவிடப்பட்டனர்.
ADVERTISEMENT
மொத்தமாக 54 பேர் பயணித்த அந்த பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது. பயணிகள், ஓட்டுநர், நடத்துநர் என அனைவரும் கீழே இறங்கி நிலையில், தீயானது பரவத் தொடங்கியது. உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் பெருமுயற்சி எடுத்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் பேருந்தின் அனைத்து பகுதிகளும் முழுவதுமாக எரிந்து நாசமானது. இச்சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.
Show comments