ADVERTISEMENT

என் தாழ்மையான வேண்டுகோள்... ராகவாலாரன்ஸ் உருக்கம்...

09:53 AM Nov 27, 2018 | rajavel



நாம் கேள்வி பட்டதை விட அதிக பாதிப்பு டெல்டா மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. டெல்டா மக்களுக்கு உதவ அனைவரும் முன்வரவேண்டும் என ராகவாலாரன்ஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ADVERTISEMENT

இதுதொடர்பாக அவர், கஜா புயல் நிவாரணமாக 50 விடுகளை கட்டித் தருவதாக அறிவித்திருந்தேன். அதற்கான ஆரம்ப கட்ட வேலைகளுக்காக திருவாரூர் குன்னனூருக்கு வந்து பார்த்தேன். நாம் சென்னையில் கேள்விப் பட்டது போல் இல்லாமல் ஒரு தெருவில் 50 வீடுகளுக்கு மேல் பாதிக்கப் பட்டிருப்பதை பார்த்து அந்த பகுதி மக்களின் வலியையும் வேதனையையும் உணர்ந்தேன்.

ADVERTISEMENT

நாம் கேள்வி பட்டதை விட அதிக பாதிப்பு டெல்டா மக்களுக்கு. அந்த பகுதி மக்களை மீட்டெடுக்க நாம் எல்லோரும் ஒன்றினைய வேண்டும். அவர்களுக்கு உதவ எல்லோரும் முன் வர வேண்டும். இது தான் என் தாழ்மையான வேண்டுகோள் என அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT