ADVERTISEMENT

திருச்சி துறையூர் அருகே சரக்கு வாகனம் கிணற்றில் விழுந்து 2 பேர் பலி!!

04:54 PM Aug 18, 2019 | kalaimohan

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே 22 பேருடன் சென்ற சரக்கு வாகனம் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த கிணற்றில் விழுந்து ஏற்பட்ட விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த திருமனூர் என்ற இடத்தில் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வாகனம் சாலையோர கிணற்றில் விழுந்தது. தண்ணீர் குறைவாக உள்ள கிணற்றில் இருந்து இதுவரை 10 பேர் மீட்கப்பட்டுள்ளனர். வாகனத்தில் பயணம் செய்த 22 பேர்களில் 10 பேர் தற்போது மீட்கப்பட்டுள்ளனர். மற்றவர்கள் பொதுமக்கள் உதவியுடன் மீட்கப்பட்டு வருகின்றனர். இந்த விபத்தில் தற்போது இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT