ADVERTISEMENT

நான்கு மாவட்டங்களில் முதல்வர் பழனிசாமி ஆய்வு!

09:44 AM Sep 17, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை மற்றும் வளர்ச்சிப் பணிகள் தொடர்பாக இராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய நான்கு மாவட்டங்களில் முதல்வர் பழனிசாமி நேரில் ஆய்வு மேற்கொள்கிறார்.

செப்டம்பர் 22- ஆம் தேதி காலை இராமநாதப்புரத்திலும், பிற்பகல் தூத்துக்குடியிலும் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை செய்கிறார்.

அதன் தொடர்ச்சியாக, செப்டம்பர் 23- ஆம் தேதி காலை கன்னியாகுமரியிலும், பிற்பகல் விருதுநகரிலும் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை செய்கிறார்.

மேலும் இம்மாத இறுதியில் சிவகங்கை, புதுக்கோட்டை, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் முதல்வர் ஆய்வு செய்ய உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT