கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு நெஞ்சுவலி காரணமாக சென்னையில் சக்திவேல் முருகனுக்கு இருதய பை பாஸ் அறுவை சிகிச்சை நடந்திருக்கிறது. அதன் பின் ஒய்விலிருந்திருக்கிறார். நேற்றிரவு அவருக்குத் திடீரென காய்ச்சல் வர,நெல்லையிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை எடுத்தவர், வீடு திரும்பினார். தூங்கினால் சரியாகிவிடும் என்று சொல்லி விட்டு இரவு தூங்கியிருக்கிறார். அப்போது திடீரென மாரடைப்பு ஏற்பட, இரவில் உயிர் பிரிந்திருக்கிறது.
இவரது மகன் மகாகிருஷ்ணன் நெல்லை மாவட்ட உதவி மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியில் உள்ளார். அடுத்த மகளான டாக்டர் சௌந்தரி பால திருமணமாகி களக்காட்டில் உள்ளார். இன்னொரு மகளான டாக்டர் சூர்ய பாலா அமெரிக்காவில் வசித்து வருகிறார். மறைந்த முன்னாள் எம்எல்ஏ சக்திவேல் முருகனின் உடலுக்கு அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.