Skip to main content

மிஷன்-15 திட்டம்! செந்தில் பாலாஜி, அனிதா ராதாகிருஷ்ணனுக்கு ஸ்டாலின் கிரீன் சிக்னல்!

Published on 02/06/2019 | Edited on 02/06/2019

 

நாடாளுமன்றத் தேர்தலில் 37 இடங்களில் திமுக கூட்டணி முன்னிலையில் இருக்கிறது என்று செய்தி வந்தபோது மகிழ்ச்சியடைந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இடைத்தேர்தல் முடிவுகளை அறிந்து கொள்வதில்தான் அதிக ஆர்வம் காட்டினார். திமுக 9 இடங்களை நழுவ விட்டத்தை அவரால் ஜீரணிக்க முடியவில்லை. மேலும் மத்தியிலும் ஆட்சி மாற்றம் நடக்கவிலலை என்பதும் எதிர்பார்ப்பை தகர்த்துவிட்டது. 
 

முன்பைவிட வலிமையாக மத்தியில் மோடி உட்கார்வதால் இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு அதிமுகவை அசைக்க முடியாதோ என்கிற சந்தேகமும் திமுக தலைவர்களுக்கு எழுந்தது. இந்த நிலையில்தான் இன்னும் 3 மாதங்களுக்கு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடக்கவில்லையெனில் எடப்பாடி ஸ்ட்ராங்க் ஆகிவிடுவார் என கட்சியின் சீனியர்களும் எம்எல்ஏக்களும் விவாதித்துக்கொண்டனர். இந்த விவாதம் ஸ்டாலினின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. 

 

senthil balaji mk stalin anitha radhakrishnan


இந்தச் சூழலில், தளபதிக்கு சம்மதம் எனில் அதிமுகவை என்னால் உடைக்க முடியும் என திமுகவின் தேர்தல் வியூகத்தை கவனித்த ஓ.எம்.ஜி. அமைப்பிடம் சொல்லியிருக்கிறார் செந்தில் பாலாஜி. அதேபோல, அதிமுக எம்எல்ஏக்கள் சிலர் என்னிடம் நல்ல தொடர்பில் இருக்கின்றனர் என ஸ்டாலினிடம் தெரிவித்திருக்கிறார் அனிதா ராதாகிருஷ்ணன். 
 

இந்த நிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் பலரும் அமைச்சர் பதவி, வாரிய பதவி கிடைக்காமல் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருக்கின்றனர். அமைச்சர்கள் பலரும் எடப்பாடி பழனிசாமியோடு முரண்பட்டு நிற்கின்றனர். அதனால் எம்எல்ஏக்களிடம் பேசினால் நம் பக்கம் வர தயங்க மாட்டார்கள். நம்மிடம் வந்த செந்தில் பாலாஜிக்கு கட்சி பதவியும், தேர்தலில் சீட்டு தந்து ஜெயிக்க வைத்திருப்பதும் அதிமுகவினருக்கு நம் மீது நல்ல அபிப்ராயத்தை தந்திருககிறது. 
 

அதனால் தேவையான அளவில் அதிமுக எம்எல்ஏக்களை நம் பக்கம் இழுப்பதன் மூலம் இந்த ஆட்சிக்கு ஒரு முடிவு கட்டலாம். இதனை செய்யாமல் அமைதியாக இருந்தால் அடுத்த இரண்டு வருடமும் அதிமுக ஆட்சிதான் என்கிற விசயங்களை ஸ்டாலினின் கவனத்திற்கு கொண்டு போயிருக்கிறார்கள் சீனியர்கள். இதற்கு ஸ்டாலின் க்ரீன் சிக்னல் தர, மிஷன்-15 என்கிற ஆபரேஷனை துவங்கியிருக்கிறது திமுக என்று சுட்டிக்காட்டுகிறார்கள் சீனியர்களுக்கு நெருக்கமானவர்கள்.
 

மிஷன்-15 குறித்து விசாரித்தபோது, அதிமுக எம்எல்ஏக்களை திமுகவுக்கு கொண்டு வந்து அதன் மூலம் ஆட்சியை கவிழ்க்க வேண்டுமானால் மூன்றில் இரண்டு பங்கு எம்எல்ஏக்கள் தேவை. அதன்படி கணக்கிட்டால் 82 பேர் வேண்டும். 82 பேர் திமுகவை ஆதரித்தால் கட்சித்தாவல் தடைச்சட்டத்தின்படி அவர்களின் பதவிகள் பறிபோகாது. ஆனால் 82 எம்எல்ஏக்களை இழுப்பது நடக்கிற காரியமல்ல. அதனால் 15 எம்எல்ஏக்களை குறிவைத்துள்ளோம். அவர்கள் சிக்கியதும் எடப்பாடி ஆட்சிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர திடடம். அப்போது நடக்கும் வாக்கெடுப்பில் அந்த 15 பேரும் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் அல்லது அன்றைய தினம் அவர்கள் சபைக்கு வரமாட்டார்கள் அல்லது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிடுவார்கள். இதனால் அவர்களின் பதவி பறிபோகும்.
 

இதனையடுத்து வரும் இடைத்தேர்தலில் அவர்களுக்கே சீட் தந்து திமுகவை ஜெயிக்க வைத்து ஆட்சியை கைப்பற்றுவதற்றுவதுதான் மிஷன்-15 திட்டம். அதாவது தமிழகத்திற்கு பொதுத்தேர்தல் நடக்கும்போது திமுக ஆட்சியில் இருக்க வேண்டும் என்பதே சீனியர்களின் விருப்பம். இந்த திட்டம் திருச்சி நேரு, அனிதா ராதாகிருஷ்ணன், செந்தில்பாலாஜி ஆகியோரிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதிமுக எம்எல்ஏக்களிடம் அவர்கள் பேசி வருகின்றனர். தற்போது 7 எம்எல்ஏக்கள் திமுகவிடம் வீழ்ந்திருக்கிறார்கள். விரைவில் மிஷன்-15 சக்சஸ் ஆகும். மூன்று மாதத்தில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி கவிழும் என விவரிக்கிறது திமுக தரப்பு. 
 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.

Next Story

“கையில் புத்தகங்கள் தவழட்டும்” - முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Let the books creep in the hand says Chief Minister MK Stalin

மக்களிடையே வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிப்பதற்காக ஐக்கிய நாடுகளின் சபையான யுனெஸ்கோ சார்பில் உலக புத்தக தினம் ஒவ்வொரு ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உலக புத்தக தின வாழ்த்துச் செய்தியை தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில், “புதிய உலகத்திற்கான திறவுகோல், அறிவின் ஊற்று, கல்விக்கான அடித்தளம், சிந்தனைக்கான தூண்டுகோல், மாற்றத்திற்கான கருவி, மக்களை உணர வழிகாட்டி எனப் புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை. அதனால் புத்தகங்களை வாசியுங்கள், நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள். புத்தகங்களைப் பரிமாறிக் கொள்வதை ஓர் இயக்கம் என நான் தொடங்கியது முதல் பெறப்பட்ட இரண்டரை லட்சம் புத்தகங்களுக்கு மேல், பல மாணவர்களுக்கும், நூலகங்களுக்கும் கொடையளித்துள்ளேன். கையில் புத்தகங்கள் தவழட்டும்! சிந்தனைகள் பெருகட்டும்! நல்வழி பிறக்கட்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 2017 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவராக பொறுப்பேற்றதிலிருந்தும் 2021-ஆம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகும் தன்னைச் சந்திக்க வருபவர்கள், பூங்கொத்துகள், பொன்னாடைகளைத் தவிர்த்து அன்பின் பரிமாற்றத்திற்கு அடையாளமாக புத்தகங்களை வழங்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார். அதன்படி தன்னைச் சந்திக்க வந்த பலரும் வழங்கிய ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்களை தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு நூலகங்களுக்கும், புத்தகங்கள் கோரிக் கடிதம் அளித்தவர்களுக்கும், அமைப்புகளுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.