ADVERTISEMENT
சென்னை, மெரினா கடற்கரைக்குப் பொதுமக்கள் செல்ல இன்று தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் தேர்வு நடத்தக்கோரி மாணவர்கள் மெரினாவில் போராட்டம் நடத்த உள்ளதாகத் தகவல் பரவிய நிலையில் மெரினா கடற்கரைக்கு பொது மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் சென்னை, மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டதால் மெரினாவில் உள்ள சர்வீஸ் சாலை மூடப்பட்டு பல இடங்களிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டு காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ADVERTISEMENT
Show comments