ADVERTISEMENT

நள்ளிரவில் அகற்றப்பட்ட  கொடிக்கம்பம்... பாஜக போராட்டம்!

05:23 PM Sep 18, 2020 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழக பா.ஜ.க சார்பில், நேற்று பிரதமர் மோடியின் 70 -ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, மதுரவாயல் ஏரிக்கரை பகுதியில் 70 அடி உயரமுள்ள கொடிக் கம்பம் நிறுவப்பட்டது.

இதனைத் தமிழக பா.ஜ.க தலைவர் முருகன் கொடியேற்றி திறந்து வைத்தார். இந்நிலையில், நள்ளிரவில் இந்தக் கொடிக்கம்பம் அகற்றப்பட்டது. நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான இடத்தில் இந்தக் கொடிக் கம்பம் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், இவ்வளவு உயரக் கொடிக்கம்பம் ஆபத்து எனவும் கூறப்பட்டு நள்ளிரவில் கம்பம் அகற்றப்பட்டது.


இதனையடுத்து, மதுரவாயலில் கொடிக்கம்பம் அகற்றப்பட பகுதியில் பா.ஜ.கவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு உண்டாகியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT