ADVERTISEMENT

படகு கவிழ்ந்து கடலில் தத்தளித்த மீனவர்கள்.. ஒருவர் பலி..!

10:41 AM Dec 31, 2020 | tarivazhagan

ADVERTISEMENT

மாதிரி படம்

ADVERTISEMENT

சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டையை அடுத்த புதுக்குப்பம் மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபால் (70). இவர், இன்று அதிகாலை 3 மணிக்கு புதுக்குப்பம் கடற்கரைப் பகுதிக்கு மூன்று நபர்களுடன் கடலில் மீன் பிடிக்கச் சென்றுள்ளார்.

இவர்கள் மீன் பிடித்துக்கொண்டு காலை 7 மணிக்கு புதுக்குப்பம் கடற்கரையில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் வந்து கொண்டிருக்கும்போது, அலையின் சீற்றம் அதிகமாக இருந்ததால் படகு கவிழ்ந்துள்ளது. இதில், 3 பேரும் கடலில் விழுந்து தத்தளித்துள்ளனர்.

இதில் ஜெயபால் அதிகமாக தண்ணீர் குடித்துள்ளார். அவருடன் சென்ற மீனவர்கள், அவரை மீட்டு பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT