Skip to main content

சிதம்பரம் அருகே 'போக்ஸோ' சட்டத்தில் இளைஞர் கைது!

Published on 27/10/2020 | Edited on 27/10/2020

 

Youth arrested near Chidambaram under POCSO law

 

சிதம்பரம் அருகே வண்டெட் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி, தனியார் பள்ளியில் 9 -ஆம் வகுப்பு படித்து வருகிறார்.


விருதாச்சலம் பெரியவடவாடி கிராமத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் (20), இன்ஜினீயரிங் பட்டதாரி. இவர், பள்ளி மாணவியிடம் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி வந்துள்ளார். கடந்த ஆறு மாத காலமாகக் காதலிப்பதாகப் பழகி மாணவியை ஏமாற்றி அவரது வீட்டுக்கே வந்து பலமுறை தனிமையில் இருந்துள்ளார். இந்த நிலையில் திங்கள்கிழமை விஜயதசமியன்று மாணவியின் தாய் ஆசிரியை என்பதால், பள்ளிக்குச் சென்றபோது, வீட்டுக்கு வந்து மாணவியுடன் இருந்துள்ளார் ஜெயக்குமார்.

 

அப்போது பள்ளிக்குச் சென்ற மாணவியின் தாய், சற்று நேரத்தில் வீட்டிற்கு வந்தபோது இருவரையும் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் அவர்களை சிதம்பரம் மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று ஒப்படைத்தார். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் இளைஞரின் செல்ஃபோனை ஆய்வு செய்தபோது, அவர் பல பெண்களுடன் இதுபோல் இருந்தது  தெரியவந்தது. அவர் மீது 'போக்ஸோ' சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் திருமாவளவன் உள்ளிட்ட 14 பேர் போட்டி!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
14 contests including Thirumavalavan in Chidambaram Parliamentary Constituency

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் கட்டமாக பாராளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதனையொட்டி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான புதன்கிழமை சிதம்பரம் தொகுதியில் 27 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும் அரியலூர் மாவட்ட ஆட்சியருமான ஆணிமேரி ஸ்வர்னா தலைமையில் வேட்பு மனுக்கள் பரிசீலனை வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் திமுக கூட்டணி தலைமையில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், அதிமுக வேட்பாளர் சந்திரகாசன், பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜான்சிராணி, பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் நீலமேகம், நாடாளும் மக்கள் கட்சியின் வேட்பாளர் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இதில் சுயேச்சையாக போட்டியிட்ட முன்னாள் அதிமுக எம்பி சந்திரகாசி மனு நிராகரிக்கப்பட்டது.  மேலும் மாற்று வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்ட பிரதான கட்சி வேட்பாளராக 6 பேரும் 8  சுயேச்சை வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். இதில் இறுதி வேட்பாளர் பட்டியல் 30-ந்தேதி வெளியிடப்படுகிறது. இன்னும் வேட்பாளர்கள் குறையும் என்று கூறப்படுகிறது.

Next Story

சிதம்பரத்தில் இ.பி.எஸ். பிரச்சாரம்; பொதுக்கூட்ட பணிகள் தீவிரம்!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Edappadi Palaniswami is campaigning in Chidambaram on 31st

சிதம்பரம் பாராளுமன்றத் தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் திமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிடுகிறார். அதேபோல் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியில் பா.ஜ.க. சார்பில் வேலூர் மாநகராட்சி முன்னாள் மேயர் கார்த்தியாயினி போட்டியிடுகிறார்.

அதிமுக தலைமையிலான கூட்டணியில் வேட்பாளர் சந்திரகாசன் போட்டியிடுகிறார். இவருக்கு வாக்கு கேட்டு வரும் 31 ஆம் தேதி சிதம்பரம் புறவழிச் சாலை பகுதியில் அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

இதனையொட்டி பொதுக்கூட்டம் மேடை அமைப்பதற்காகப் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் சிதம்பரம் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ. பாண்டியன், புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் அருள்மொழி தேவன் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.