ADVERTISEMENT

கோயம்பேட்டில் இரண்டு ஆம்னி பேருந்துகளில் தீ!

04:35 PM Jul 27, 2019 | kalaimohan

கோயம்பேட்டில் உள்ள தனியார் பேருந்துகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ள இடத்தில் இரண்டு தனியார் ஆம்னி பேருந்துகள் தீ பற்றி எரிந்து வருகிறது. தற்போது இரண்டு ஆம்னி பேருந்துகள் முழுவதும் எரிந்து முடிந்து தற்போது மூன்றாவது பேருந்துக்கு தீ பரவும் சூழல் ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT


ADVERTISEMENT

தற்போது அங்கு மூன்று தீயணைப்பு வாகனங்களில் வந்துள்ள தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்து வருகின்றனர். தீ பிடித்ததற்கான காரணம் என்னவென்று சரியாக தெரியவரவில்லை. இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT