ADVERTISEMENT

தாம்பரத்தில் கார் விபத்து... நொறுங்கிய காரில் சிக்கியவர்களை மீட்க தீயணைப்புத் துறை போராட்டம்!

04:56 PM Dec 03, 2020 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தாம்பரத்தில் இருந்து குரோம்பேட்டை நோக்கி வந்த கார், விபத்துக்குள்ளாகியதில் காரினுள் சிக்கிக்கொண்ட மூன்று பேரை மீட்க தீயணைப்புத் துறையினர் போராடி வருகின்றனர்.

தாம்பரத்தில் இருந்து குரோம்பேட்டை நோக்கி, பிரதான சாலையான ஜி.எஸ்.டி சாலையில் வந்த லாரி ஒன்று, திடீரென டயர் வெடித்ததால் நிலைதடுமாறி அருகில் இருந்த சாலை தடுப்பின் மீது மோதி நின்றது. அப்பொழுது, பின்னால் வேகமாக வந்த கார், நின்று கொண்டிருந்த லாரி மீது பலமாக மோதிய நிலையில், கார் அப்பளம் போல நொறுங்கியது. இந்த விபத்தில், காரில் இருந்த வயதான பெண்மணி உப்பட மூன்று பேரும் சிக்கிக்கொண்டனர். சம்பவம் அறிந்து அங்கு வந்த தீயணைப்புத் துறையினர், காரினுள் சிக்கியவர்களை மீட்க அரை மணிநேரமாகப் போராடி வருகின்றனர். உடைந்த காரின் பாகங்களை வெட்டி எடுக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதனால், ஜி.எஸ்.டி சாலையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT