சென்னை தாம்பரத்தில் சண்முகா சாலையிலுள்ள மார்க்கெட்டில் பாரதி திடல் என்ற இடத்தில் நேற்று நள்ளிரவு திடீரென தீப்பற்றி எரிந்தது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
நள்ளிரவில் ஏற்பட்ட இந்த தீ விபத்தால் அந்த மார்க்கெட் பகுதியில் இருந்த பழக்கடைகள், வளையல் கடைகள், துணி கடைகள் போன்ற சுமார் இருபதுக்கும் மேற்பட்ட சாலையோர கடைகள் நெருப்பில் எரித்து சாம்பலாயின. மேலும் பல லட்ச மதிப்பிலான பொருள் எரிந்து நாசமாகின.
சம்பவம் குறித்து அறிந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்தனர். தீயை அணைக்க தீயணைப்பு துறை வீரர்கள் நள்ளிரவில் பல மணிநேரம் போராடி பின்னர் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். மின் கசிவால் இந்த தீ விபத்து ஏற்பாட்டிற்காலம் என்று கூறப்படுகிறது. மேலும் போலீசார் இந்த திடீர் தீவிபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.
Show comments