ADVERTISEMENT
தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதப் போராட்டம் இன்று நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், "நெல் குவிண்டால் ஒன்றுக்கு 3000 ரூபாய் வழங்க வேண்டும், கரும்பு டன் ஒன்றுக்கு 4500 ரூபாய் வழங்க வேண்டும், வீராணம் நிலக்கரி திட்டத்திற்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும்" எனப் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். உண்ணாவிரதப் போராட்டத்தில் குழுவின் தலைவர் பி.ஆர்.பாண்டியன் உட்பட ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments