ADVERTISEMENT

சிதம்பரம் அருகே மின்னல் தாக்கி விவசாயி பலி!

09:14 PM Oct 11, 2021 | suthakar@nakkh…

ADVERTISEMENT

ADVERTISEMENT

சிதம்பரம் அருகே அடுத்த கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் (45) விவசாயி. இவர் கிராமத்தில் உள்ள அவரது வயலில் இன்று (திங்கள்) மாலை வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென மழை இடி மின்னலுடன் பெய்தது. இடி மின்னல் தாக்கி ரமேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

மேலும் அவருடன் விவசாய வேலையில் ஈடுபட்ட அதே ஊரைச் சேர்ந்த ஞானப்பிரகாசம் (22 ) சிறு காயங்களுடன் சிதம்பரத்தில் உள்ள கடலூர் மாவட்ட அரசு கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகிறார். விவசாயி உடல் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அண்ணாமலை நகர் காவல் துறையினர் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT