ADVERTISEMENT

மோசடி வழக்கில் பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி கைது!!

04:26 PM Jul 25, 2018 | vasanthbalakrishnan

ADVERTISEMENT

ADVERTISEMENT

சென்னையில் பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி அனிஷா கைது செய்யப்பட்டுள்ளார்.

நெசப்பாக்கத்தை சேர்ந்த அனிஷா என்கின்ற பூர்ணிமாவும் அவரது கணவர் சக்திமுருகனும் ஸ்கை எக்யூப்மென்ட் என்ற பெயரில் வீட்டு உபயோக பொருட்களை விற்பனை செய்துவந்தனர். இந்நிலையில் கே.கே.நகரை சேர்ந்த பிரசாந்த்குமார் என்பவர் வைந்திருந்த நிறுவனத்தில் 101 வீட்டு ஏசிகளை மொத்தமாக வாங்கியுள்ளனர். அதற்கான தொகையை வங்கி காசோலையில் செலுத்தியுள்ளார் அனிஷா. ஆனால் அந்த கணக்கில் பணம் இல்லாததால் பிரசாந்த் அவரிடம் பணம் கேட்டுள்ளார். ஆனால் அனிஷாவோ பணம் தரமுடியாது என கூறி மிரட்டியுள்ளார். இதனை தொடர்ந்து கே.கே.நகர் காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் நடிகை அனிஷாவையும் அவரது கணவரின் சகோதரன் ஹரிகுமாரையும் போலீசார் கைதுசெய்துள்ளனர்.

அனிஷாவின் கணவர் சக்திமுருகன் தலைமறைவாகி உள்ள நிலையில் இவர்கள் நடத்திவந்த ட்ராவல் ஏஜென்சியிலும் பல மோசடிகள் நடந்துள்ளதாகவும் போலீசாருக்கு புகார் கிடைத்துள்ளது. மேலும் அனுஷாவின் கணவர் சக்திமுருகனையும் போலீசார் தேடிவருகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT