ADVERTISEMENT
ADVERTISEMENT
கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக மே 17ஆம் தேதி வரை தமிழகத்தில் பொது முடக்கம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பேருந்து, சரக்கு வாகனங்களுக்கு வாகன வரி செலுத்த ஜூன் 30-ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஆண்டு வரி, காலாண்டுக்கான வரி என அனைத்து வகையான வாகன வரியை செலுத்த ஜூன் 30 ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆண்டு வரிக்கு காலக்கெடு ஏப்ரல் 10-ல் இருந்து ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது எனவும், காலாண்டு வரிக்கு காலக்கெடு மே 15ல் இருந்து ஜூன் 30 நீட்டிக்கப்பட்டு உள்ளது எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் வரி செலுத்துவதில் ஏற்பட்ட சிரமங்களை கருத்தில்கொண்டு காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT