ADVERTISEMENT

'தமிழகத்தில் ஏற்றுமதி நிறுவனங்கள் செயல்பட அனுமதி'!

02:31 PM May 29, 2021 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழகத்தில் 8 மாவட்டங்களைத் தவிர பிற மாவட்டங்களில் ஏற்றுமதி நிறுவனங்கள் செயல்பட அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணையை வெளியிட்டது.

அதன்படி, தமிழகத்தில் கோவை, திருப்பூர், சேலம், கரூர், ஈரோடு, நாமக்கல், திருச்சி, மதுரை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் ஏற்றுமதி நிறுவனங்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களைத் தவிர பிற மாவட்டங்களில் 50% ஊழியர்களுடன் ஏற்றுமதி நிறுவனங்கள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை நான்கு சக்கர வாகனங்களில் மட்டுமே அழைத்துச் செல்லலாம். அனுமதிக்கப்பட்ட நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு ஒரு மாதத்தில் கரோனா தடுப்பூசி போட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT