ADVERTISEMENT

சட்டசபையில் இருந்து அதிமுகவினர் வெளியேற்றம் - சபாநாயகர் உத்தரவு 

12:32 PM Apr 27, 2022 | sivar@nakkheeran.in

ADVERTISEMENT

ADVERTISEMENT

தஞ்சாவூரில் இருந்து பூதலூர் செல்லும் சாலையில் 4 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது களிமேடு கிராமம். இந்த கிராமத்தில் சுமார் 150 ஆண்டுகள் பழமையான அப்பர் மடம் உள்ளது. இந்த மடத்தில் ஆண்டுதோறும் சித்திரை மாத சதய நட்சத்திர நாளில் அப்பர் சதய விழா கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல 94ஆம் ஆண்டு சதயவிழா நேற்று தொடங்கியது.

விழாவின் ஒரு பகுதியாக, நேற்று இரவு மின் அலங்கார சப்பரத்தில் அப்பர் படம் வைத்து வீதி உலாவாக கொண்டு வரப்பட்டது. இந்த நிலையில், இன்று அதிகாலை 4 மணிக்கு கீழத் தெருவிலிருந்து முதன்மைச் சாலைக்கு வந்து தேர் திரும்பியபோது, சப்பரத்தில் அலங்காரத்திற்காக கட்டப்பட்டிருந்த இரும்புக்குழாய் ஒன்று மேலே சென்ற உயரழுத்த மின் கம்பியில் உரசியுள்ளது. கீழே மின் விளக்குகளுக்காக அதிக திறன் கொண்ட ஜெனரேட்டரும் இழுத்து வரப்பட்ட நிலையில் இரு மின்சாரமும் ஒன்றுக்கொன்று உரசி அதிக மின் அழுத்தத்தால் மின்சாரம் பாய்ந்துள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே 11 பேர் உயிரிழந்தனர். மேலும், 15 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்களுக்கு தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இன்று சட்டசபையில் இது குறித்தான விவாதம் நடந்தபோது காங்கிரஸ் எம்.எல்.ஏ. செல்வப்பெருந்தகை ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது நடந்த மகாமகம் சம்பவம் குறித்து பேசினார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த அதிமுகவினர், அதை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என சபாநாயகரிடம் கோரிக்கை வைத்தனர். அதை அவர் மறுக்க, சபாநாயகர் இருக்கை முன்பாக அமர்ந்து அதிமுகவினர் கோஷமிட்டனர். இதையடுத்து, சபாநாயகரின் உத்தரவின் பேரில் அதிமுகவினரை சட்டசபையில் இருந்து அவைக்காவலர்கள் வெளியேற்றினர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT