ADVERTISEMENT
இதனையடுத்து கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு எதிராக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், 1 கோடியே 10 லட்சம் ரூபாய் மான நஷ்ட ஈடாக வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புப்படுத்திப் பேச தனபாலுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.
ADVERTISEMENT
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பான விசாரணை சென்னை உயர்நீதி மன்றத்தில் இன்று நடைபெற்றது. அப்போது எடப்பாடி பழனிசாமியின் சாட்சியப் பதிவு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. சாட்சியப் பதிவு குறித்த அறிக்கையை வழக்கறிஞர் ஆணையர் எஸ். கார்த்திகை பாலன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். மேலும் இந்த வழக்கை பிப்ரவரி 1 ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
Show comments