ADVERTISEMENT

'ஏண்டா எனக்கு தலைக்கறி வைக்கல...?' - விருந்துக்கு அழைத்த நண்பனுக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்!

11:32 AM Feb 27, 2020 | Anonymous (not verified)

கிடா வெட்டி கறிசோறு சாப்பிடத்தான் அழைத்தான் ஆனால் அவனது நண்பர்கள் கிடாவுக்கு பதிலாக தன்னையே பலிபோடுவார்கள் என்று அந்த அப்பாவி நினைத்திருக்கமாட்டான்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஈரோடு ஐயன் காடு பகுதியைச் சேர்ந்த தறிப்பட்டறை தொழிலாளி துரையன். இவரது மனைவி உமா. துரையனின் சொந்த ஊரில் கோவில் திருவிழா நடந்துள்ளது. இதனைத் தொடர்ந்து துரையன் அவரது வீட்டில் நண்பர்களுக்கு கிடா விருந்து கொடுத்துள்ளார். கிடா விருந்து முடிந்த பிறகு நேற்று இரவு துரையன் மற்றும் அவரது நண்பர்கள் நெரிக்கல்மேடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது குடிக்க சென்றனர்.

அப்போது கிடா விருந்து தொடர்பாக 'ஏண்டா எனக்கு தலைக்கறி வைக்கல...? ஏண்டா எனக்கு குடல்கறி வைக்கல...?' என ஆளுக்கு ஆள் துரையனிடம் கேட்க அவர்களுக்குள் வாய் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து நண்பர்கள் அனைவரும் சேர்ந்து துரையனை தாக்கியுள்ளனர். அப்போது அருகில் இருந்த ஒரு பெரிய கல்லை எடுத்து துரையன் தலையில் போட்டு விட்டனர். இதில் அவர் தலையில் பலத்த காயம் அடைந்து உயிருக்காக போராடினார்.

துரையனை தாக்கிய நண்பர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். துரையனை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த துரையன் சிகிச்சை பலனின்றி நள்ளிரவு இறந்து விட்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிடா விருந்து தொடர்பாக தறிப்பட்டறை தொழிலாளி தனது நண்பர்களாலேயே அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT