ADVERTISEMENT

வடமாநிலத் தொழிலாளர் மர்ம மரணம்; போலீசார் தீவிர விசாரணை

09:29 AM May 23, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஈரோடு மாவட்டம் தாசில்தார் தோட்டத்தில் முரளிதரன் என்பவருக்குச் சொந்தமான சலவைப் பட்டறை செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான வடமாநிலத் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் இதே வளாகத்தில் உள்ள வீடுகளில் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த நிக்கில் (வயது 23) என்ற வாலிபர் கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பு முரளிதரனின் சலவைப் பட்டறையில் தங்கியிருந்து வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் நேற்று நிக்கில் வேலைக்கு செல்லாததால் உடன் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் அவரது அறைக்கு வந்தனர். அப்போது அவரது அறையில் நிக்கில் உடல் தீப்பிடித்து எரிந்த நிலையில் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து நிக்கில் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் நிக்கில் கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். நிக்கிலுடன் உடன் வேலை பார்க்கும் சக தொழிலாளர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். இது குறித்து கருங்கல்பாளையம் போலீசார் சந்தேகம் மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பிரேதப் பரிசோதனை அறிக்கை வெளியான பிறகே கொலைக்கான உண்மை நிலவரம் தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர். .வடமாநிலத் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT