ஈரோட்டில் பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் கோவில் திருவிழா இன்று மாலை நிறைவு பெற்றது. ஒவ்வொரு வருடமும் மாசி மாதம் பூச்சாட்டுதலுடன் தொடங்கும் இத்திருவிழா 15 நாட்கள் தொடர்ந்து நடக்கும் அதன்படியே இவ்வருடமும் நடைபெற்றது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
பொங்கல் விழா முடிந்து இன்று கம்பங்களை ஈரோடு நகர் முழுக்க வீதி உலாவாக கொண்டு சென்றனர் கோயில் பூசாரிகள். இதனையொட்டி மஞ்சள் நீராட்டுவிழாவும் நடைபெற்றது. ஆண்கள், பெண்கள் என பொதுமக்கள் அனைவரும் மஞ்சளை தண்ணீரில் கரைத்து ஒருவர் மேல் ஒருவர் மஞ்சள் நீரை ஊற்றி திருவிழா மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர்.
இறுதியாக இன்று இரவு கோயில் கம்பங்களை வாய்க்கால் நீரில் கரைக்கப்பட்டு மாரியம்மன் பொங்கல் திருவிழாவை நிறைவு செய்தனர்.
ADVERTISEMENT
Show comments