ADVERTISEMENT

ஈரோட்டில் பட்டதாரி இளைஞர் தூக்கிட்டு தற்கொலை!

04:09 PM Apr 07, 2023 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஈரோடு மாணிக்கம்பாளையம் முனியப்பன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி சாந்தி. இவர்களுக்கு விஜய் (25) என்ற மகன் உள்ளார். விஜய் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு எந்த ஒரு வேலைக்கும் செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் அவருக்கு மது அருந்தும் பழக்கமும் இருந்துள்ளது. நண்பர்களுடன் ஊர் சுற்றிக்கொண்டு இருந்ததால் அவரது பெற்றோர் விஜய்யை கண்டித்துள்ளனர். இதனால் மன வேதனையில் இருந்த விஜய் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே விஜய் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT