Skip to main content

வீடியோவை காட்டி நான்கு ஆண்டுகளாக பலரை சீரழித்த கொடூரன் கைது..ஈரோட்டில் பரபரப்பு

Published on 28/04/2019 | Edited on 29/04/2019

ஈரோட்டில் கல்லூரி மாணவியிடம் சில்மிஷங்கள் செய்து அதை செல்போனில் வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு நான்கு ஆண்டுகளாக அவரை மிரட்டி தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய காம கொடூரனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

 

ஈரோடு காந்தி நகரைச் சேர்ந்த மாணவி ஒருவர் திண்டல் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிஎஸ்சி முதலாம் ஆண்டு பயின்று வந்தார். மாணவி கல்லூரிக்கு வெளியில் அமைந்துள்ள கடைக்கு சென்று வரும்போது வில்லரசம்பட்டி யை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்ற  ஏற்கனவே திருமணமானவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

 

person was arrested for sexually destroying many people for four years

 

மாணவியின் பிறந்தநாளன்று ஏற்காடு செல்லலாம் என அழைத்துச் சென்ற ராதாகிருஷ்ணன் காரில் செல்லும்போது ஆபாசப்படங்களை காட்டியவாறு காரில் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளான. சில்மிஷத்தில் ஈடுபட்டதை மற்றொரு செல்போன் கேமராவில் படம் பிடித்துக் கொண்ட ராதாகிருஷ்ணன் அதனை இணையத்தில் பதிவேற்றி விடுவதாக மிரட்டி மாணவியை பாலியல் உறவுக்கு அழைத்துள்ளான்.

 

 

வேறுவழியின்றி அதற்கு சம்மதித்த மாணவியை ஈரோடு பேருந்துநிலையம் முன்பு உள்ள விக்னேஸ்வரா லாட்ஜுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். அதனையும் வீடியோவாக பதிவு செய்து கொண்ட ராதாகிருஷ்ணன் அந்த வீடியோவை காண்பித்து மிரட்டி கடந்த 4 ஆண்டுகளாக மாணவியை தொடர்ந்து சீரழித்துள்ளான்.

 

person was arrested for sexualy destroying many people for four years

 

இடையில் முதல் முறை கர்ப்பமடைந்த மாணவிக்கு காரில் வைத்து போலியாக தாலி கட்டி மனைவி என்று கூறி தனியார் மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்த ராதாகிருஷ்ணன் இரண்டாவது முறை கர்ப்பம் ஆன பொழுது கருக்கலைப்பு மாத்திரை கொடுத்து கருவை கலைத்துள்ளான்.  மாணவியின் செல்போனில் உள்ள அவரது தோழிகளின் எண்ணை சேகரித்து அவர்களில் பலருக்கும் இதே போன்று பாலியல் இச்சைக்கு மிரட்டியுள்ளான் உட்படுத்தியுள்ளான்.  

 

இந்த கொடுமைகள் குறித்து வெளியில் சொல்ல முடியாத அந்த மாணவியின் செயல்பாடுகளில் மாற்றத்தை கண்ட பெற்றோர் அவரிடம் இது குறித்து கேட்டபோது தனது பெற்றோரிடம் நடந்த உண்மையை மாணவி கூற அவரது பெற்றோர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் கொடுத்தனர். 

 

person was arrested for sexually destroying many people for four years

 

இதனையடுத்து ராதாகிருஷ்ணன் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீஸார் அவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். வசதியான குடும்ப பின்னணியை கொண்ட ராதாகிருஷ்ணன் வேலை வெட்டிக்கும் செல்லாமல் கல்லூரி முன் உள்ள நண்பனின் கடையில் அமர்ந்து கொண்டு ஏராளமானவர்களை பேசி மயக்கி இதேபோல்  100க்கும் மேற்பட்ட பெண்களை கொடுமைக்கு ஆளாக்கி வந்திருப்பது விசாரணையில் தெரிய வந்திருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

 

அண்மையில் பொள்ளாச்சியில் நடந்த பாலியல் கொடூரம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் அதனை அடுத்து பெரம்பலூரிலும் இதுபோன்ற பாலியல் சம்பவங்கள் நடைபெற்றதாக குற்றச்சாட்டுகளும், செய்திகளும் வெளியானது. இந்நிலையில் ஈரோட்டில் அதே போன்று பாலியல் வன்கொடுமை நிகழ்வு கொடூரம் நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் வீடு புகுந்து படுகொலை; 6 மணி நேரத்தில் பிடிபட்ட குற்றவாளி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் 6 மணி நேரத்தில் குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

இந்த சம்பவத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், உயிரிழந்த பெண்ணின் சகோதரி மகனே கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. பணம் கேட்டுத் தராததால் ஆத்திரத்தில் இருந்த சரஸ்வதியின் சகோதரி மகன் அசோக் குமார், வீட்டில் சரஸ்வதி தனியாக இருந்த பொழுது கத்தியால் குத்திக் கொலை செய்தது தெரியவந்தது.

Next Story

பார் மேற்கூரை இடிந்து 3 பேர் உயிரிழப்பு; 12 பேர் மீது வழக்கு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Bar roof collapses, 3 lost live Case against 12 people

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதியில் மேற்கூரை இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்த நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமாக இயங்கி வந்த பாரின் முதல் தளத்தின் மேற்கூரை நேற்று இரவு திடீரென யாரும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்தது. இதில் திண்டுக்கல்லைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ் (வயது 45). மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (வயது 21) லாலி (வயது 22) ஆகியோர் உயிரிழந்தனர். உயிரிழந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டுப் பிரேதப் பரிசோதனைகளுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த விபத்து குறித்து காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விபத்து நடந்தபோது உள்ளே இருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்திய போது, விபத்து நடந்த இடத்தின் உள்ளே 3 பேர் மாட்டிக் கொண்டுள்ளதாகத் தகவல் வந்தது. விடுதியின் முதல் தளத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார்.

தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ பணியின் போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாக இந்த கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் முதற்கட்டமாக 12 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள அபிராமபுரம் போலீசார், பாரின் மேலாளர் சதீஷ் உட்பட ஐந்து பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.