ADVERTISEMENT

‘வேலையும் கிடைக்கல கல்யாணமும் நடக்கல...’ - என்ஜினீயரிங் பட்டதாரி எடுத்த விபரீத முடிவு 

07:00 PM Oct 06, 2023 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஈரோடு காசியண்ணன் வீதியைச் சேர்ந்தவர் அர்ஜுனன் (60). ஜெனரேட்டர் மெக்கானிக். இவரது மகன் மகேஷ்வரன் (28). பி.இ. படித்துள்ளார். இவரது படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காததால் வீட்டிலேயே ஆன்லைன் மூலமாக 3டி அனிமேஷன் வேலை செய்து அதில் வரும் சொற்ப வருமானத்தில் வாழ்ந்து வந்துள்ளார்.

மேலும், தன்னுடன் படித்த நண்பர்கள் எல்லாம் நல்ல வேலை, திருமணம் என செட்டிலாகிவிட தனக்கு 28 வயதாகியும் இன்னும் திருமணமாகாமல், படிப்புக்கேற்ற வேலை இல்லாமல் இருக்கிறோமே எனப் புலம்பி வந்துள்ளார். இதனால், வீட்டில் இருப்பவர்களிடமும் சரிவரப் பேசாமல் இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மகேஷ்வரன் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றுள்ளார். மதியம் வீடு திரும்பிய மகேஷ்வரனின் தாயார் மகன் தூக்குப் போட்டுத் தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மகனை மீட்டு ஈரோடு அரசுத் தலைமை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர், வரும் வழியிலேயே மகேஷ்வரன் இறந்துவிட்டதாகக் கூறினார். இதுகுறித்து ஈரோடு டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT