ADVERTISEMENT
ADVERTISEMENT
சென்னை ஃபோர்டு தொழிற்சாலையில் உருவாக்கப்பட்ட கடைசி காருக்கு கண்கலங்கியவாறு ஊழியர்கள் விடைக்கொடுத்தனர்.
சென்னையை அடுத்த மறைமலை நகரில் கடந்த 25 ஆண்டுகளாக ஃபோர்டு தொழிற்சாலை இயங்குகிறது. கடந்த 10 ஆண்டுகளாக இழப்பைச் சந்தித்து வருவதாகக் கூறி ஃபோர்டு தொழிற்சாலை வரும் ஜூலை மாதம் 31- ஆம் தேதி அன்றுடன் மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, ஃபோர்டு தொழிற்சாலையில் கார் உற்பத்தி முடிவடைந்தது.
கடைசியாக, இந்த தொழிற்சாலையில் உருவாக்கப்பட்ட ஃபோர்டு காரை அலங்கரித்து கண்ணீர் மல்க ஊழியர்கள் விடை கொடுத்தனர்.
ADVERTISEMENT
Show comments