ADVERTISEMENT
ADVERTISEMENT
புத்தாண்டு, பொங்கல் பண்டிகை நாட்களில் ஞாயிறு கால அட்டவணைப்படி மின்சார இரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு இரயில்வே அறிவித்துள்ளது. சென்னை கடற்கரை - தாம்பரம், செங்கல்பட்டு, திருமால்பூர், வேளச்சேரி, அரக்கோணம் ஆகிய மார்க்கங்களில் வாரநாட்களில் இயக்கப்படும் இரயில்களின் எண்ணிக்கையைவிட, பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலங்கள் விடுமுறை நாட்களான ஞாயிறு அன்று குறைவான எண்ணிக்கையிலே இரயில்கள் இயக்கப்படும். அரசு விடுமுறைகளின் போதும், ஞாயிறு அட்டவணைப்படியே புறநகர் மின்சார இரயில்கள் இயக்கப்படு வருகின்றன. இந்நிலையில், ஆங்கில புத்தாண்டான இன்று, பொங்கல் பண்டிகை, குடியரசு தின விழா போன்ற விடுமுறை நாட்களிலும் ஞாயிறு கால அட்டவணைப்படியே இரயில்கள் இயக்கப்படுமென தெற்கு இரயில்வே செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது.
Show comments