இந்நிலையில், தமிழகத்தில் வேட்பு மனுத்தாக்கலின் போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பில், “வேட்பாளர்கள் நாளை (20.03.2024) காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வேட்பு மனுத்தாக்கல் செய்யலாம். வேட்பு மனுத்தாக்கல் நடைபெறும் நாளில் பிற்பகல் 3 மணிக்கு மேல் தேர்தல் நடத்தும் அலுவலகத்தில் நுழைய அனுமதி இல்லை. தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகத்தில் இருந்து 100 மீட்டருக்குள் 2 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். வேட்பு மனுத்தாக்கல் செய்யும்போது வேட்பாளருடன் சேர்த்து 5 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.
85 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் அஞ்சல் வழியாக வாக்களிப்பதற்கு மார்ச் 25 ஆம் தேதிக்குள் அதற்குரிய படிவத்தை பூர்த்தி செய்து அளிக்க வேண்டும். வட சென்னை தொகுதிக்குப் பழைய வண்ணாரப்பேட்டை வட்டார துணை ஆணையாளர் அலுவலகத்தில் மனுத் தாக்கல் செய்யலாம். மத்திய சென்னை தொகுதிக்கு செனாய் நகரில் உள்ள மத்திய வட்டார துணை ஆணையாளர் அலுவலகத்தில் மனுத் தாக்கல் செய்யலாம். தென் சென்னை தொகுதிக்கு அடையாறில் உள்ள தெற்கு வட்டார துணை ஆணையாளர் அலுவலகத்தில் மனுத் தாக்கல் செய்யலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.