குடிநீர் தட்டுப்பாட்டை போக்க தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. முழுமையாக மழைப்பொழிவு இல்லாததால் குடிநீர் தட்டுப்பாடு தற்போது ஏற்பட்டுள்ளது. அதனை சரி செய்ய அனைத்து முயற்சிகளையும் அரசு எடுத்து வருகிறது. தமிழகத்தில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க ஆலோசனை கூட்டம் நடத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அவர்களின் கோரிக்கை ஆதரவு தெரிவிக்கும் வகையில் தான் அப்படி ஒரு டுவிட்டை நான் பதிவிட்டு இருந்தேன். ஆனால் அது சர்ச்சையை கிளப்பியதால் நீக்கிவிட்டேன். தமிழ் பிற மாநிலத்தில் பயிற்றுவிக்கப்பட வேண்டும் என்று தான் டுவிட்டரில் பதிவிட்டேன். ஆனால் அதை மும்மொழிக் கொள்கையை தான் ஆதரிப்பதாக அரசியல் ஆதாயத்திற்காக தவறான தகவல்களை பரப்புகின்றனர். தமிழகத்தில் இரு மொழிக் கொள்கையில் தான் இருக்க வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது எனக் கூறினார்.