ADVERTISEMENT

பன்வாரிலால் புரோஹித் உடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!

09:58 AM Sep 14, 2021 | suthakar@nakkh…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், தமிழ்நாட்டில் இருந்து விடைபெற்று பஞ்சாப் மாநில ஆளுநராகப் பொறுப்பேற்க உள்ள ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இந்த சந்திப்பில் அதிமுக எம்.எல்.ஏக்கள் கே.பி. முனுசாமி, வேலுமணி, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

ஏற்கனவே தமிழ்நாடு முதல்வர் மற்றும் அமைச்சர்கள் ஆளுநரை சந்தித்து வாழ்த்து தெரிவித்த நிலையில், இந்த சந்திப்பு தற்போது நடைபெற்றுள்ளது. தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக என்.ஆர். ரவி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் விரைவில் ஆளுநராக பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவரின் நியமனத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சிகள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT