ADVERTISEMENT

எடப்பாடிக்காக அழைத்து வரப்பட்டவர் மூச்சு திணறி உயிரிழப்பு!!!

07:53 AM Mar 24, 2019 | raja@nakkheeran.in

வேலூர் நாடாளுமன்ற தொகுதி, அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் மற்றும் குடியாத்தம் (தனி) சட்டமன்ற தொகுதியின் இடைத்தேர்தல் பரப்புரைக்காக முதல்வர் எடப்பாடி.பழனிச்சாமி மார்ச் 23ந்தேதி வருகை தந்திருந்தார்.

ADVERTISEMENT


கே.வி.குப்பத்தையடுத்த சோலமூர் பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளியான தாமோதரனை, முதல்வர் பிரச்சாரம் நடைபெறும் இடத்துக்கு அதிமுகவினர் அழைத்து சென்றுயிருந்தனர்.

ADVERTISEMENT

நீண்ட நேரம் வெயிலில் நின்றிருந்துள்ளார். மேலும் அவர் வயதான நபரும்கூட, முதல்வரின் வாகனம் வரும்போது கூட்டம் நெரித்து தள்ள சாலை ஓரம் நின்றிருந்தவரின் மீது சிலர் விழுந்ததன் காரணமாக தாமோதரன் கீழே விழுந்துள்ளார். அவரை அங்கிருந்த போலிஸார் மற்றும் கட்சியினர் மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அவசரமாக கொண்டு சென்று சேர்த்துள்ளனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார் எனக்கூறப்படுகிறது. இது சென்டிமெண்டாக அதிமுகவினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT