வருகிற 19ஆம் தேதி தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் நான்கு தொகுதிகளில் நடைபெற உள்ளது. அதில் ஒன்று ஒட்டப்பிடாரம். இந்த தொகுதியில் அதிமுகவின் வேட்பாளராக மோகன் என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
அதிமுக வேட்பாளருக்கு ஆதரவு திரட்டி இன்று தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொகுதியில் வாக்கு சேகரித்தார். தொடர்ந்து அவர் மக்களிடம் பேசும்போது , அம்மாவின் ஆட்சி நீடிக்க வேண்டுமென்றால் நீங்கள் அதிமுகவுக்கு வாக்களியுங்கள் என்று வேண்டிக்கொண்டார். இதற்கிடையே முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு 65 வயது முடிந்து 66 வயது. நேற்று பிறந்த தினம். இதை அங்கு உள்ள அதிமுக நிர்வாகிகள் கொண்டாட முடிவு செய்தனர்.
Show comments