சட்டமன்ற கூட்ட தொடரில் துறை ரீதியான கோரிக்கைகள் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு துறையில் உள்ள கோரிக்கைகள், பிரச்சனைகள் பற்றி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேள்விகளுக்கு துறைசார்ந்த அமைச்சர்கள் பதிலும், விளக்கமும் அளித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று நடந்த தமிழக சட்டசபையில் உத்திரமேரூர் தொகுதியில், சில சுங்க சாவடிகள் (டோல்கேட்) அதற்கான காலம் முடிந்த பிறகும் மக்களிடம் பணம் வசூலித்து வருகிறது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837429466-0'); });
எனவே, அவற்றை அகற்ற வேண்டும் என திமுக சட்டமன்ற உறுப்பினர் சுந்தரம் தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்தார். இதற்கு பதில் அளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, திமுகவை சேர்ந்தவர் அமைச்சராக இருந்தபோதுதான் சுங்கச்சாவடி வந்தது. நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் எண்ணிக்கையில் அதிகமாக இருக்கிறோம் என பெருமையாக சொல்லும் திமுகவினர் தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்ற நாடாளுமன்றத்தில் பேசி உதவ வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.